Saturday 1 March 2014

நெஞ்சம் பொறுக்குதில்லையே..!!! nenjam porukuthillaiyae..!!!

nenjam porukuthillaiyae

--நெஞ்சம் பொறுக்குதில்லையே--

தீராத நோயாக 
மாறாத சாபமாய் 
பணமெனும் விஷம் 
மனித ஜாதிக்குள் !! 

வாக்குகள் கால் குப்பி 
மதுவிற்கு விற்பனையாகிறது 
தேசமோ கட்சிகளிடம் 
அடகு போகிறது !! 

கட்சிகளோ உரிமைகளையும் 
நசுக்கி நம்மை 
அடிமையாக்கி ஆளுகிறது !! 


உயிர் நீத்து பெற்ற 
சுதந்திரம் எங்கே ? 

நல்ல தலைவனை 
பொம்மையாக அரியணையில் 
அமர்த்தி பொம்மலாட்டம் 
ஆடும் அரக்கர்கள் காலிலே !! 


விழுப் புண்ணை அணிகலனாக 
அணிந்த வீரம் எங்கே ? 

தூங்குகிறது நிம்மதியாக 
மெத்தையிலும் மதுவிலும் 
வீறுகொண்டு எழுகிறது 
தெருவிலே மங்கையிடமும் 
சாதிச் சண்டையிலும் !! 


எல்லையிலே அத்து மீறல் 
கோட்டையிலே நாட்டை 
விற்க பேச்சு வார்த்தை 
ஆனால் 
காதலுக்காக போராடும் 
குருட்டு சமூகம் !! 


மதத்தை மைதானமாக்கி 
சாதியை இரையாக்கி 
தேசத்தை வேட்டையாடும் 
அரசியல் ஓநாய்கள் !! 


தேசியக் கொடியை 
தலைக் கீழாக தொங்கவிடும் 
தேசபிதாக்கள் !! 

இவர்களின் மத்தியிலே நான் 
என்ன செய்வது ? 

ஊழலை தட்டி கேட்க 
நாதியில்லை 
விஸ்வரூபம் படத்திற்கு 
விஸ்வரூபமெடுக்கும் !! 

தாய் மொழி காக்க 
வக்கில்லை 
தலைவா படத்திற்கு 
தீக்குளிக்கும் !! 

இந்த மூடர் கூட்டமே 
நாடெங்கிலும் !! 


வேர்வை சிந்தியும் 
வயிறு நிறையாமல் சாகும் 
உழைப்பபாளியின் மரணத்தில் 
மகிழ்ச்சியுறும் முதலாளிகள் !! 


சாமியையெல்லாம் கண்ணைக்கட்டி 
காட்டுக்கு அனுப்பிவிட்டு 
காவியணிந்து களியாட்டமாடும் 
போலிச் சாமியார்ககளுக்கு 

சிறையும் அந்தபுரமாம் 
நீராட கங்கை நீராம் !! 

இன்னும் எத்தனை எத்தனையோ 
அவலங்கள் 
கண் முன்னே கணக்கிட்டு 
எழுத முடியவில்லை 
தீர்ந்தது என் பேனாவின் மை !! 

இவையெல்லாம் 
காணும் போது என் 
நெஞ்சம் பொறுக்கு தில்லையே !! 


வீர வாளாய் பிறந்தும் 
உறையிலே உறங்குவதா ? 

மறக்குடி மங்கையெனக்கு 
வேண்டாம் 
அந்த அவப் பெயர் !! 

நான் 
எழுதுகோலை வாளாக்கி 
எழுத்துக்களால் பட்டைதீட்டி 
போராடப் போகிறேன் !! 

நீங்கள் எப்படி ?? 

இனியொரு மாகத்மாவோ 
நேதாஜியோ பகத் சிங்கோ 
பிறக்க மாட்டார் மண்ணில் 
எல்லோரும் உன்னில் !! 

விருப்பம் உங்களுடையது 
ஆனால் 
தேசத்தின் தலையெழுத்து 
உன் கையில் 
மறந்துவிட வேண்டாம்!!

---- சுதா ----

3 comments:

  1. சிலிர்க்க வைத்த உணர்ச்சி வரிகள்.அருமை!

    ReplyDelete
  2. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    ஒரு வயது குழந்தைகளை வரவேற்போம்

    ReplyDelete
  3. தமிழ்மன்றம், எழுத்து.காம் -ல் தொடங்கி வலைப்பூவில் சந்திப்பதில் மகிழ்ச்சி...உங்கள் கோபங்களை கூர்மையான எழுதுகோலால் செம்மையுடன் பரப்புங்கள்.

    ReplyDelete